Thursday, May 15, 2014

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் புதியபடம்


சசிகுமார் நடிப்பில் ‘சுந்தர பாண்டியன்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘இது கதிர் வேலன் காதல்’ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் இயக்கிய இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து தற்போது மூன்றாவது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இவர் இயக்கும் மூன்றாவது படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றிய முழு விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப் போவதாக எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியுள்ளார்.

No comments: