Thursday, May 1, 2014

மீண்டும் விடுதலைப் புலிகள் – அமெரிக்கா தகவல்!


விடுதலைப் புலிகளின் வலையமைப்பு பலமாக இயங்கி வருவதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அவர்கள் சர்வதேச வலையமைப்புகள்... தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, சிறிலங்கா மட்டுமன்றி உலக நாடுகளும் தமது ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க முயற்சி வருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

No comments: