Thursday, May 15, 2014

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்: ஜெயலலிதா


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்– அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கே.மலைச்சாமி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மலைச்சாமி முன்னாள் எம்.பி. ஆவார். மாநில தேர்தல் அதிகாரியாகவும் இருந்தார்.

No comments: