Saturday, November 24, 2018

பெரியவருக்கு வீர வணக்கம்

தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான எல்.சந்தானம் அவர்கள் இன்று மறைந்திருக்கிறார். 2005ம் ஆண்டு மார்ச் மாத தேவர் மலர் இதழுக்காக சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அவரை சந்தித்தோம். மதுரை திருநகரில் தேவர் திருமகனார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று இவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய முதல்வர் ஜெ,ஜெயலலிதா அவர்கள் திருநகர் இல்லத்தை நினைவிடமாக்க ஆணை பிறப்பித்தார். அதற்கு நன்றி சொல்லும் விதத்தில் அவரது பேட்டி தேவர் மலரில் வெளியானது. அதன் பின்பு பலமுறை அவரை பேட்டி கண்டிருக்கிறேன். இருப்பினும் முதல் முறை அவரைச் சந்தித்த போது எனக்கு சிறிய வயது 25, இந்த வயதில் பத்திரிகை நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். உங்களுக்கு தேவர் துணை இருப்பார் என்று வாழ்த்தினார். இன்று வரை தேவர் மலர் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் மறைந்திருக்கும் இன்றைக்கு அவர் அன்றைக்கு கூறிய ஆசீர்வாத வார்த்தைள் எனது மனதில் பதிந்திருக்கிறது. பெரியவர் என்று அழைக்கப்படும் ஐயா எல்.சந்தானம் அவர்களுக்கு தேவர் மலர் சார்பில் வீர வணக்கம். அவரது ஆன்மா சாந்தியடைய தேவர் திருமகனாரை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்!
Image may contain: 4 people, people smilingImage may contain: 4 people, textImage may contain: 3 people

Thevar Malar

No comments: