Friday, June 17, 2011

மதுரை: தி.மு.க., வை சேர்ந்த கட்சி பிரமுகர் ஒருவருக்கு மாநகராட்சி இடத்தை ஆக்கிமிரத்து கொள்ள உதவி செய்தமைக்காக மதுரை தி.மு.க., மேயர் தேன்மொழி மற்றும் துணைபோன கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்படும் அளவிற்கு முகாந்திரம் இருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மதுரை மேயராக இருந்து வருபவர் தேன்மொழி. இவரது கணவர் கோபிநாதன். தி.மு.க.,வில் தனக்கென மதுரை மாவட்டத்தில் முழு செல்வாக்கு பெற்றவர்.

என்ன குற்றம் செய்தார் மேயர் ? தேன்மொழி மேயராக பொறுப்பேற்றதும் கட்சியின் தி.மு.க.,வின் இலக்கிய அணி செயலர் சுந்தரராஜன் என்பவர் மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக கிரையம் பெற்றதாக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார் தெரிவிக்கப்பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேயர், கமிஷனர் சிக்னல் காரணமாக சர்வேயர் குருசாமியிடம் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தான் வழக்கின் சாராம்சம்.

இது தொடர்பாக லஞ்ச போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வக்கீல் ஜெயராம் என்பவர் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப்டேவிட் கடந்த 14 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருப்பதாக இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். லஞ்சம் வாங்குதல், கூட்டுச்சதி, லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கின் போக்கிற்கு ஏற்ப கைது நடவடிக்கையும் இருக்கும். முதலில் சிக்கினார் மதுரை தி.மு.க., மேயர்.,

No comments: