Tuesday, June 28, 2011

புதிய சிக்கலில் டைரக்டர் பாலா!

அவன் இவன் படம் ரீலிஸ் ஆன நாள் முதலே பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சந்தித்து வரும் டைரக்டர் பாலாவுக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அவன் இவன் படத்தில், குர்பானி கடமையை இழிவுபடுத்தியிருப்பதாக மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோரிடம் தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

தேசிய லீக் கட்சி மாநில அமைப்பு செயலர் சீனி அகமது, நகர் தலைவர் ஜெய்லானி ஆகியோர் கொடுத்துள்ள அந்த மனுவில், குர்பானி எனும் கடமையை முஸ்லிம்கள் அனைவரும் காலம் காலமாக நிறைவேற்றி வருகிறோம். இயக்குனர் பாலா மற்றும் அவரது குழுவினர் எடுத்த அவன் இவன் படத்தில், குர்பானியை பற்றி கேவலமாகவும், முஸ்லிம்களின் மனம் நோகும்படியும் திரைக்கதை அமைத்துள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கும் இயக்குனர் பாலா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.
Tags »

No comments: