Monday, June 20, 2011

சீமான் இயக்கும் பகலவன் தலைப்பு மாறுகிறது?

வேலாயுதம், நண்பன் படங்களில் விஜய் நடிப்பதற்கு முன்பே பகலவன் என்றொரு கதையை அவரிடம் சொல்லி ஓ.கே செய்து வைத்திருக்கிறார் சீமான். மேற்படி படங்களை தற்போது விஜய் முடிக்கும் தருவாயில் இருப்பதால் அடுத்து விஜய்யை இயக்க தயாராகி வருகிறார் சீமான். அதேசமயம் அப்படத்தின் தலைப்பையும் மாற்ற அவர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யிடம் சீமான் சொல்லியிருக்கும் கதைக்கு பகலவன் பொருத்தமான தலைப்பு என்றுதான் முன்பு அடித்து கூறினர். ஆனால் அதன்பிறகு சூரியன் அவர்களுக்கு ஆகாததாகி விட்டதால், பகலவன் என்றாலும் சூரியன்தான் வருகிறது. நமக்கு பிடிக்காத தலைப்பை எதற்காக படத்துக்கு வைக்க வேண்டும் என்று இப்போது விஜய்-சீமான் இருவரும் சேர்ந்து மாற்று தலைப்பு யோசித்து வருகினறனர். இந்த யோசனையில் உதித்த கோபம் என்றொரு தலைப்பை விஜய்யிடம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார் சீமான். என்றாலும் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை.

No comments: