Friday, June 24, 2011

சாதனை படைக்கும் அவன் இவன்!

அவன் இவன் படத்திற்கு பலதரப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் எதிர்பார்த்த வசூலை விட அதிகம் வந்திருப்பதாக கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளர். பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால், ஜனனி அய்யர், மதுஷாலினி, அம்பிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தவாரம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கும் படம் "அவன் இவன்". பாலாவின் படமா அவன் இவன் என்று சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் அவன் இவன் படத்தை பற்றி பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றனர். இடையில் அவன் இவன் படத்தில் சொரிமுத்து அய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியை கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு வேறு தொடரப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவன் இவன் படம் அதிக வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் கூறுகையில், அவன் இவன் படத்தின் ஓபனிங்கில் இருந்து இப்போது வரைக்கும் அனைத்து தியேட்டர்களிலும் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ரிலீசான ஒரு வாரத்திற்குள்ளேயே ரூ.35 கோடி வரை வசூலாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் அவன் இவன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும், படத்தை பார்க்க ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது என்றார்.

No comments: