Tuesday, July 28, 2015

தமிழகத்தில் நாளை மறுநாள் பொது விடுமுறை: அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.  

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை மறுநாள்( வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை விடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments: