Thursday, June 21, 2012

முரட்டுக்காளை படத்தில் வில்லங்க வசனம்: நெல்லை தியேட்டரை சூறையாடிய கும்பல்


நெல்லையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் சுந்தர்.சி நடித்த முரட்டுக்காளை படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் பேசும் ஒரு வசனம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை குறை கூறுவது போல உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். படத்தில் அந்த வசனத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது காட்சி சினிமா ஒளிபரப்ப தியேட்டர் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து வந்தனர். அப்போது ஒரு ஆட்டோவில் உருட்டுக்கட்டையுடன் வந்த 5 பேர் கும்பல் தியேட்டருக்குள் புகுந்து கண்ணாடி ஜன்னல்கள், ஷோகேஷ்கள், உள்ளே இருந்த கடை மற்றும் பொருட்களை சரமாரி தாக்கி உடைத்து விட்டு ஆட்டோவில் தப்பி ஓடி விட்டனர்.
 
இதுகுறித்து தியேட்டர் மேலாளர் சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரேனியல் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ஜான்பாண்டியனின் தீவிர ஆதரவாளர்கள் 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

No comments: