Sunday, January 10, 2016

மோடியைத் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்: வைரமுத்து அறிக்கை

தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டை, சில நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழியேற்பட்டுள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடியையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.

No comments: