Tuesday, August 6, 2013

திருத்தணி அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை

திருவள்ளூர் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியில் மாவட்ட இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் பசும்பொன்ராஜா(35). இவர் ஆர்.கே.பேட்டையில் நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அகூர் பேருந்துநிலையம் அருகே சரமாரியாக தாக்கினர். பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

No comments: