Monday, August 26, 2013

PLEASE HELP OUR RELATIVES

கடந்த அக்டோபர் 30,2012, தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன் சென்று தேவரை தர்சித்துவிட்டு வீடு திரும்புகையில் மதுரை அருகே நயவஞ்சகமாக சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு நம்முடைய 6 சகோதரர்கள் இறந்தனர். மேலும் 13 பேர்கள் பெரும் தீக்காயத்திற்கு உள்ளானார்கள் அதில் 3 பேர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். பெரும் பாதிப்புக்கு உள்ளான நம் சகோதர்களாகிய அந்த 3 பேரும் கைகள் விரைத்த நிலையில்...எந்த அசைவும் இன்றி இருக்கிறது.உடம்புக்கு சட்டை போடக்கூட முடியாமல் விரைத்த நிலையில் இருக்கிறது சகோதர்களின் கைகள்....கடந்த 10 மாதங்களாக பெரும் வலி வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். தாகத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டுமென்றாலும் வயிற்று பசிக்கு உணவு உட் கொள்ளவதாக இருந்தாலும் அடுத்த நபர்களின் உதவியை எதிர்ப்பார்த்து வாழ்ந்தே 10 மாதங்கள் ஓடிவிட்டன.. இனியும் மருத்துவம் செய்யப்படவில்லை எனில் அவர்கள் நிரந்தர ஊனமாக ஆகிவிடுவார்கள்..அரசாங்க உதவியோ, தான் சார்ந்த சமூக உதவியோ கிடைக்காமல் மன உளைச்சலில் தவிக்கும் நம் சகோதர்களுக்கு உதவுவது மனசாட்சியின் படி நம் கடமை. ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் ஊனம் சரி செய்யப்படவேண்டும். இந்த 3 சகோதர்களுக்கும் மருத்துவ செலவாக ரூபாய் 3 லட்சம் என மருத்துவர்கள் தெரித்த நிலையில் அவர்களுக்கு உதவ தேவர் மீது பற்றுள்ள உங்கள் மனது முன்வரட்டும். குறைந்த பட்சம் ஒருநாள் ஊதியத்தையாவது மனதார அவர்கள் மருத்துவ செலவுக்கு பங்கிடுவோம். பசும்பொன் தேவரின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்க இது ஒரு சந்தர்ப்பம்!! நம்பிக்கையோடு அவர்கள் ஊனத்தை சரிசெய்வோம். NOTE : THOSE WHO WISH TO HELP ..PLEASE CONTACT IN VENKAZONE@YAHOO.COM / +917259028827

No comments: