Sunday, November 10, 2013

செங்கோட்டையில் ரெயில் மறியல்: நாம் தமிழர் கட்சியினர் 19 பேர் கைது


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த சில நாட்களாக தொடரந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் செங்கோட்டையில் இன்று ரெயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் இளம்பாசறை ஒருங்கிணைப்பாளர் மணி முன்னிலையில் வக்கீல் பிரிவு சிவகுமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் கண்ணன், பரணி ராஜபாண்டி, மலர் திலீபன், முனீஸ்வரன் உள்பட 19பேர் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்ற மதுரை பயணிகள் ரெயிலை மறிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வானமாமலை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

No comments: