Wednesday, November 13, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு: மதுரையில் உண்ணாவிரதம் இருந்த நாம் தமிழர் கட்சியினர் கைது


இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை நினைவு படுத்தும் வகையில், தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா கடந்த 8–ந்தேதி நடைபெற்றது. இந்நிலையில் நினைவு முற்றத்தின் சுற்றுப்புற சுவர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக கூறி இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுப்புற சுவர் இடிக்கப்பட்டது. இதை கண்டித்து இன்று, மதுரை தமுக்கம் மைதானம் முன்புள்ள தமிழ் அன்னை சிலை அருகே நாம் தமிழர் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 7 பேர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 7 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

No comments: