Saturday, January 24, 2015

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு

ராமநாதபுரம் அரண்மனையான ராமலிங்க விலாசத்தில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. சேதுபதி மக்கள் இயக்கத் தலைவர் சி.சுந்தரசாமித் தேவர் தலைமையில் வகித்தார்.
நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஜே.வி.சி. நேதாஜி, மங்களநாததுரை, சுப்பிரமணியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் இயக்க பொதுச் செயலாளர் எஸ்.கோபால் வரவேற்றார். மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் திருஉருவப்படத்துக்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சண்முகசாமி, பொருளாளர் ராஜேந்திரன், சேதுராமன், தேவிபட்டினம் சீனிவாசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: