Tuesday, March 6, 2012

அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் திரு நா.பசும்பொன் பாண்டியன் அவர்கள் கூறியது.

" எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. சங்கரன் கோவில் தொகுதியில் ஒட்டுமொத்த மக்களும் அ.தி.மு.க விற்கு ஆதரவான நிலையை கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் அ.தி.மு.க விற்கு எங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டுமென்று எங்களது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

No comments: