Monday, March 19, 2012

இலங்கை போர்குற்றம்: நடராஜன் கருத்து

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்நாடு தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு ஆதரவளித்திருக்க வேண்டும் என்று (சசிகலா)நடராஜன் கூறியுள்ளார். திருச்சி ரியல் எஸ்டேட் வரதராஜன் தொடுத்த பணமோசடி குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜனின் சிறைக்காவல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதற்காக, நடராஜன் இன்று திருச்சி ஜே எம் 4 நீதிபதி புஷ்பராணி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, நடராஜனின் சிறைக்காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். தீர்ப்பிற்கு பிறகு கோர்ட்டிற்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த நடராஜன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

No comments: