Monday, March 5, 2012

இலங்கை தமிழர் பிரச்னை; சிறையில் உண்ணாவிரதம் : நடராஜன்

திருச்சி : இலங்கை தமிழர்கள் படும் பிரச்னைகளை கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார். பணமோசடி தொடர்பாக, இன்று திருச்சி சிறையில் நடராஜன் ஆஜர்படுத்தப்பட்டார். பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடராஜன் கூறியதாவது, குண்டாசில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தாலும் அதனை சந்திக்கத் தயார் என்றும், இலங்கை தமிழர் பிரச்னைக்காக, சிறையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments: