Tuesday, March 6, 2012

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி.மு.க விற்கு அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை ஆதரவு.

எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.குருவிக்குளம் சங்கரன்கோவில் ஒன்றியம் மேலிடநல்லூர் தேவர் சமூக மக்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க விற்கு ஆதரவாக உள்ளார்கள் என்று எமது சங்கரன் கோவில் தேர்தல் சிறப்பு செய்தியாளர் கூறியுள்ளார்.


மேலிட நல்லூர் , பெரிய கோவிலாங்குளம் சின்ன கோவிலாங்குளம், குருக்கள் பட்டி , அய்யாபுரம் , கருப்பனத்தூர் , முத்தையாபுரம் , தேவர் குளம் , பனவடலி சத்திரம், கொக்ககுலம் , ஆராயச்சிபட்டி உள்ளிட்ட நாற்பத்து ஒன்பது கிராமங்களில் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க விற்கு ஆதரவாக உள்ளார்கள் என்பது அ.தி.மு.க வினரை குசிப்படுத்தி உள்ளது.


சங்கரன் கோவில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தேவர் சமூக கிராமங்களிலும் அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் மாநிலத்தலைவர் கணேச தேவர் ,நெல்லை மாவட்ட செயலாளர் எஸ் கே ராமசாமித்தேவர் , மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் , ராமநாதபுரம் மாவட்ட தலைவர் , எஸ். எம் .எ .சரவணன் , மாவட்ட செயலாளர் முரசொலி ,புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுந்தர், ராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவர் காந்தி , மாநில துணைத்தலைவர் பிரவின்குமார் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாண்டிய ராஜன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அ.தி.மு.க விற்கு ஆதரவாக மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments: