Wednesday, October 24, 2012

உசிலம்பட்டியில் பி.என்.வல்லரசு குருபூஜை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பி.என்.வல்லரசு 12-வது குருபூஜை நடைபெற்றது.
 அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.என். வல்லரசுவின் நினைவிடம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ளது. 
 இங்கு, கள்ளர் கல்வி கழகத் தலைவர் எஸ். மாசாணம் தலைமையில், கல்லூரிச் செயலர் பி. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் அக்கினி, வழக்குரைஞர் பி.பி. இளையரசு, விவசாயப் பிரிவு மொக்கமாயன், ராமத் தேவர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 
 உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் ஐ. ராஜா, பசும்பொன், மணிகண்டன், எம்.பி. ராமன், பாஸ்கர பாண்டியன் மற்றும் வல்லரசு பிரிவு தலைவர் அம்மாசி தலைமையில் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments: