Wednesday, October 24, 2012

தேவர் நினைவிடத்தில் நடிகர் பாக்கியராஜ் அஞ்சலி

பசும்பொன் நினைவிடத்தில் நடிகர் பாக்கியராஜ் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
 திரைப்பட நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.முருகவேல், ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.கே.வி.முத்துராமலிங்கம், உறுப்பினர் சின்ன உடப்பங்குளம் வி.வாசுதேவன், நகர செயலர்கள் எம்.எம்.அம்பலம் (கமுதி), வி.ஏ.முத்து அபுபக்கர் (அபிராமம்) உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.
 பாக்கியராஜை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் வரவேற்றார். பின்னர் அவர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து கமுதி சென்றார். பஸ் நிலையம் முன்பாக உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு பாக்கியராஜ் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

No comments: