Wednesday, May 15, 2013

நாம் தமிழர் கட்சி 4-ம் ஆண்டு தொடக்க விழா: கடலூரில் 18-ந் தேதி நடக்கிறது

திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் முடிவடைந்து 4-ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி வருகிற 18-ந் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.




அன்று காலை 10 மணிக்கு கடலூர் டி.வி.என். திருமண மண்டபத்தில் ‘வீழ்வோம் என்று நினைத்தாயோ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். மாலையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், பல முக்கிய தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.



இதுகுறித்து சீமான் கூறியதாவது:



நாம் தமிழர் கட்சியை முதலில் சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். அவர் தொடங்கியதை நாங்கள் புதுப்பித்து சிறப்பாக நடத்தி வருகிறோம். தற்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எந்த சமூகம், மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து போராடுவதற்காகத்தான் நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்த விழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.



இவ்வாறு அவர் கூறினார்.

No comments: