Monday, May 13, 2013

மாரடைப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை.......

மாரடைப்பு பிரச்னை உள்ளவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய பொருட்கள் எவை எவை என்று பார்க்கலாம் வாங்க..




இந்த பிரச்னை உள்ளவர்கள் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவு சமைக்கும் போது கொழுப்பு உள்ள எண்ணெய்யை விட கொழுப்பு குறைவாக உள்ள எண்ணெய்யை பயன் படுத்தலாம். சூரியகாந்தி போன்ற எண்ணெயில் கொழுப்பு குறைவாக இருக்கும். இவர்கள் பச்சை வெங்காயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ளவது நல்லது.



துளசி இலையை மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் தரும். உளுத்தம் பருப்பைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வரலாம். பூண்டின் வாசனை சிலருக்கு பிடிக்காது. ஆனால் மரடைப்பை கட்டுப்படுத்தும் குணம் பூண்டுக்கு உண்டு. பூண்டை நசுக்கி வாயில் போட்டுக் கொண்டு வெந்நீரை குடித்து வந்தால் மாரடைப்பு உங்களிடம் நெருங்காது.



கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ள அசைவ உணவினை குறைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அதிகம் கொண்ட உணவு பொருட்களை தவிர்க்கலாம். அதிலும் உருளைக்கிழங்கு, குளிர்பானங்கள் முதலியவற்றை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கலாம்.



எளிதில் ஜீரணம் ஆகும் உணவு பொருட்களை எடுத்து கொள்ளலாம். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது. காலையில் காற்றோட்டமான இடத்தில் நடக்கலாம்.



இந்த வழிமுறைகளை பின்பற்றினால் மாரடைப்பு இன்றி நூறு வயது வரை சந்தோஷமாக கழிக்கலாம்.

.

No comments: