Thursday, May 9, 2013

நாம் தமிழர் கட்சி நிர்வாகி தடா.சந்திரசேகரனின் தாயார் மரணம்: சீமான் அஞ்சலி

நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தடா.சந்திரசேகரனின் தாயார் ராமாமிர்தம் சென்னை கொட்டிவாக்கம் ஜெகன்நாதன் சாலையில் உள்ள வீட்டில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கட்சி தலைவர் சீமான் அஞ்சலி செலுத்தினார்.




இவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு தத்ததேரி இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. இவருக்கு மங்கையர்கரசி, விஜயராணி என்ற 2 மகள்கள் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பிலும் ராமாமிர்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: