Saturday, December 28, 2013

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 வாரத்தில் அறிவிப்பு


(25 Dec) சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 2 வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நடிகர் கார்த்திக் தெரிவித்தார். நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: நாடாளும் மக்கள் கட்சி சிறப்பாக வளர்ந்து வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர். நமது கட்சியை சிலர் ஜாதிகட்சியாக பார்க்கின்றனர். நமது கட்சி ஜாதி கட்சி கிடையாது, கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் அனைத்து சமுதாய மக்களும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த கெஜ்ரிவாலின் நடவடிக்கை சுயநலத்திற்காக கட்சி தொடங்கியது போல் உள்ளது. தேவயானி விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது. எனினும், தமிழக மீனவர்களை காக்க தவறிய மத்திய அரசு இருந்து எந்த பயனும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் வகையில் இருக்கும். நாடாளும் மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் 2 வாரத்தில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments: