Friday, December 13, 2013

சம்பளம் வாங்காத விவேக்


அறிமுக நிலையில் இருந்த விவேக், வடிவேலு ஆகியோரை தனது காமெடி மற்றும் குடும்ப கதைகளின் மூலம் உயரத்தில் ஏற்றி வைத்தவர் வீ.சேகர். அந்த நன்றிக்கடனுக்காகவே அவரது மகன் காரல் மார்க்ஸ் அறிமுகமாகும் சரவண பொய்கை படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் விவேக். இதை அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் விவேக் குறிப்பிட்ட ஒரே கரகோஷம். இதே விழாவுக்கு வந்திருந்தார் விவேக் தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நான்தான் பாலா படத்தின் தயாரிப்பாளர். நான் இந்த படத்தில் மட்டும்தான் பணம் வாங்காமல் நடிக்கிறேன். இதை நான்தான் பாலா படத்தின் தயாரிப்பாளர் கவனத்தில் வைச்சுக்கணும் என்று விவேக் சொல்ல, மேலும் சிரித்தது கூட்டம். பின்னாலேயே பேச வந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, நான் இதுவரைக்கும் வீ.சேகர் படங்களில் நடிச்சதில்ல. என்னை அவர் கூப்பிடலையே என்ற வருத்தம் இருந்துச்சு. ஆனால் இனிமே அவர் கூப்பிட்டாலும் நடிக்க மாட்டேன். ஏன்னா, விவேக்குக்கு அவர் சம்பளம் கொடுக்கலையாமே என்று தனது பங்குக்கு சிரிப்பு மூட்டினார். கலகலப்பான இந்த விழாவில் பிரபலங்கள் அத்தனை பேரும், வீ.சேகரின் மகன் அழகாக சிரிக்கிறார். பூவிலங்கு படத்தில் அறிமுகமாகும்போது முரளி எப்படி இருந்தாரோ, அப்படியிருக்கிறார் என்றெல்லாம் பாராட்ட, பக்கத்தில் பெருமை பொங்க கேட்டுக் கொண்டிருந்தார் வீ.சேகர்.

No comments: