Thursday, December 5, 2013

WHAT AN IMMEDIATE RESPONSE AGAINST THEVARS.....மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி வாலிபர் கொலை: ஜெயலலிதா இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு


முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்குத் தொடர்பாக கையொப்பமிட அனுப்பானடி அருகே ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது சில சமூக விரோதிகள் பெட்ரோல் நிரப்பிய புட்டிகள் வீசியதால், வாகனத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் முத்துவிஜயன் என்கிற ரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் சோனையா, அனுப்பானடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் முனீஸ்குமார், திருஞானம் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் மற்றும் தவசி என்பவரின் மகன் அர்ச்சுனன் ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிருவாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணி குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். THEVARS SHOULD UNITE AGAINST ADMK

No comments: