Monday, December 9, 2013

நடிகர் மயில்சாமிக்கு பாலியல் கும்பல் பணம் கேட்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை


நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விருகம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார். நேற்று மாலை போன் அழைப்பு ஒன்று அவருக்கு வந்துள்ளது. அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், "நான் ஒரு போலீஸ்காரர், நாங்கள் ஒரு பாலியல் தொழிலாளியை கைது செய்தோம்; அவரின் செல்போன் எண்ணில் உங்கள் செல்போன் எண் இருக்கிறது. அவர் உங்களிடம் தொடர்பு கொண்டுள்ளார். நீங்கள் ரூ. 50 ஆயிரம் தந்தால் இந்த விவகாரத்தை முடித்துவிடுவோம். இல்லை என்றால் வழக்கம்போல் உங்களுக்கான தொடர்புள்ள செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவோம். இன்று மாலைக்குள் ரூ.50 ஆயிரத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் இதை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அவர் சொன்ன செய்தியை ஆமோதிப்பது போல், ஒரு பெண் போலீசார் பேசுவதுபோல் ஒரு பெண் இதே தகவலைக் கூறியுள்ளார். இதை அடுத்து விருகம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார் மயில்சாமி. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்த மிரட்டல் நபரின் செல் எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

No comments: