Tuesday, May 3, 2011

முதல்வர் வீடு முன் போராட்டம்: சேதுராமன்

மதுரை:அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் சேதுராமன் அறிக்கை: தமிழகத்தில் கடுமையான மின்பற்றாக்குறை உள்ளது. காற்றாலையில் இருந்து 5800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் இருந்தாலும், கடந்த வாரம் 1800 மெகாவாட் மின்சாரம்தான் எடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் செயல்பாடே இதற்கு காரணம் என்கின்றனர். வெளிமாநிலத்தில் யூனிட்டுக்கு ரூ. 10 கொடுக்கும் மின்வாரியம், காற்றாலை மின்உற்பத்தியாளருக்கு ரூ. 2.75க்கு வாங்குவது ஏன்? அவர்களுக்கான ரூ. 1200 கோடி பாக்கி உள்ளது ஏன்? முடங்கியுள்ள மின்வாரியம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். இல்லையெனில் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் முதல்வர் கருணாநிதியின் வீட்டின் முன் முற்றுகை போராட்டம், சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: