Tuesday, May 3, 2011

முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் இலங்கை அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்; சீமான் கோரிக்கை


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும், பூந்தமல்லியில் 4 தமிழர்களும் தமிழக அரசால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடு விக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்கு புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில் அங்கு அடைத்து வைத்துள்ளது.

இந்நிலையில் கங்காதரன், சந்திரகுமார், அமலன், ஜெய மோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்க கோரி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக அரசுக்கு எட்டவில்லை. உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: