Wednesday, May 25, 2011

பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா

காஞ்சிபுரம், மே 22: குமரக்கோட்டம் முருகன் கோயிலில் பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

÷பாம்பன் என்னும் ஊரில் பிறந்த 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி பாம்பன் சுவாமிகள். இவர் பல திருக்கோயில்களை தரிசிப்பதற்காக தல யாத்திரை மேற்கொண்டார்.

÷மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி என்று பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களை தரிசித்துவிட்டு காஞ்சிபுரம் வந்தார். அங்கு பல கோயில்களை தரிசித்துவிட்டு கிளம்பும்போது இளைஞர் ஒருவர் அவரிடம், "குமரக்கோட்டத்தை தரிசித்தது உண்டா?' என்று கேட்டார்.

÷பாம்பன் சுவாமிகள் "இல்லை' என்று கூற, அந்த இளைஞரே பாம்பன் சுவாமிகளை அழைத்துச் சென்று காட்டிவிட்டு மறைந்துவிட்டார்.

No comments: