Friday, May 20, 2011

இராம.நாராயணனுக்கு வக்கீல் நோட்டீஸ்!

இராம.நாராயணனுக்கு வக்கீல் நோட்டீஸ்!

நடநது முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த இராம.நாராயணன் பதவி விலகினார். அவரைத்தொடர்ந்து செயலாளர் சிவசக்தி பாண்டியனும் விலகினார். என்றாலும் அனைத்து நிர்வாகிகளும் விலக வேண்டும் என்று கே.ஆர்.ஜி தமையிலான தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், சங்கத்தில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என்றும், முந்தைய காலகட்டத்தில் சிறு தயாரிப்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கும் எதிர்ப்பு கோஷ்டியினர், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள பாம்குரோவ் ஓட்டலில் இதுகுறித்து அவசர கூட்டம் நடத்தி இராம.நாராயணன் உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று அதிருப்தி தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

No comments: