Wednesday, April 4, 2012

ஏப்.,7ல் முழுநேர வங்கி சேவை:மத்திய அரசு

ஏப்ரல் 7ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் நாள் முழுவதும் செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மகாவீரர் ஜெயந்தி, புனிதவெள்ளி உள்ளிட்ட காரணங்களால் 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஏப்ரல் 7ம் தேதி முழுநேரமும் வங்கிகள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே வங்கி சேவைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: