Tuesday, April 3, 2012

நில அபகரிப்பு வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்

சசிகலாவின் கணவர் நடராஜன் மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது. தஞ்சாவூர் அருகே உள்ள வின்சென்ட் என்பவரது நிலத்தை முறைகேடாக அபகரிப்பு செய்தார் என நடராஜன் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு மற்றும் இது தொடர்பான சில வழக்குகளுக்காக நடராஜன் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து நடராஜனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச்சென்று மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த நில அபகரிப்பு வழக்கில் நடராஜனுக்கு ஜாமீன் வழங்கி மதுரை ‌ஐகோர்ட் கிளை இன்று உத்தரவிட்டது. இதேபோன்ற 2-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு வழக்குகள் நடராஜன் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: