Saturday, April 21, 2012

பரதேசி என்பதே பொய்

பாலா இயக்கி வரும் படத்தின் தலைப்பு என்ன? பரதேசி என்று சொல்லப்படுவதெல்லாம் சும்மதானாம். தன்னை பேட்டியெடுக்க வந்த நிருபரிடம் போகிற போக்கில் அவர் சொன்ன விஷயம்தான் அப்படியே வெளிவந்து ரசிகர்களுக்கும் எட்டிவிட்டது. ஆனால் விரைவில் இப்படத்தின் உண்மையான பெயரை அவர் அறிவிப்பார் என்கிறார்கள். இதற்கிடையில் இப்படத்தில் நடிக்க வந்திருக்கும் பூஜா, மூன்று மாத விடுமுறையில்தான் வந்திருக்கிறாராம். பெங்களூருவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், பாலாவின் அழைப்புக்காகதான் மீண்டும் நடிக்கவே வந்திருக்கிறார். என்னை சீக்கிரம் அனுப்பிவிடணும் என்ற நிபந்தனையுடன்தான் இதில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான் கடவுள் படத்தில் பூஜாவுக்கு விருது கிடைக்கும்னு நினைச்சேன். அது நடக்காம போச்சு. இந்த படத்தின் மூலமாகவாவது அவருக்கு விருது வாங்கி தரணும் என்கிறார் பாலா. நிறைவேறட்டும் கனவுகள்.






No comments: