Thursday, May 10, 2012

மௌனகுரு இயக்குநரின் அடுத்த படத்தில் யார் கதாநாயகன்

மௌனகுரு படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள இயக்குநர் சாந்தகுமார், அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். கே. ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.






மேலும் விவரங்களை இயக்குநர் சாந்தகுமாரே விளக்குகிறார், மௌனகுரு படத்திற்குப் பிறகு நிறைய தயாரிப்பாளர்கள் என்னிடம் பேசினர். ஆனால், இதுவரை கதையை முடிக்கவில்லை. அதனால் அப்போது எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போதுதான் தயாரிப்பாளரே முடிவாகியுள்ளது.





திரைக்கதை எழுதி முடித்தபிறகுதான், இதற்கு கதாநாயகன் கார்த்தியா அல்லது ஜீவாவா என்று முடிவு செய்யப்படும். எல்லாப் பணிகளும் முடிவான பிறகுதான் அறிவிப்பு வெளியிட திட்டமிட்டுள்ளேன் என்றார்.





No comments: