Tuesday, July 16, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூல் ஆசிரியருக்கு முன்ஜாமீன்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தின் ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கே. செந்தில் மள்ளர். இவர் மீண்டெழும் பாண்டியர் வரலாறு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த நூல் சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவர் மீது சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி. தேவதாஸ் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

No comments: