Tuesday, July 2, 2013

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான சட்டத்திருத்தம் ஈழப் போராட்டத்துக்கு எதிரானது: சீமான் கண்டனம்

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.


இலங்கையில் இனப்பிரச்சினைக்கான சட்டத்திருத்தம் ஈழப் போராட்டத்துக்கு எதிரானது: சீமான் கண்டனம் பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 02, 12:05 PM IST 0 கருத்துக்கள்0 இமெயில் பிரதி

திரைப்படம் சென்னை, ஜூலை. 2-



நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஏற்பாட்டை உறுதி செய்ய இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான பசில் ராஜபக்சே வரும் 4-ந்தேதி டெல்லிக்கு வரவிருப்பது தெரியவந்துள்ளது.



கடந்த சில மாதங்களாகவே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே இடையே 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தின் கீழ் தீர்வு காணும் பேச்சுக்கள் நடந்து வருகிறது.



தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் வந்த அந்நாட்டு நாடாளுமன்ற தமிழர் பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது.



இப்போது அந்நாட்டின் செல்வாக்குமிக்க அமைச்சர் பசில் ராஜபக்ச வருகிறார் என்றால், ஈழத் தமிழர்கள் மீது ஒரு தீர்வு திட்டத்தினை திணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது நன்கு புலனாகிறது.



இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அறிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அங்கமாக இருந்த தலைவர்கள்தான், இன்றைக்கு தமிழர் தேசிய கூட்டமைப்பாக இயங்கி வருகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்பிற்குட்பட்ட ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பது, ஈழத் தமிழினம் அரை நூற்றாண்டுக் காலமாக நடத்தி வரும் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு முரணானதும், எதிரானதும் ஆகும்.



13வது திருத்தத்தின்படி தமிழர் மாகாணங்களுக்கு கிடைக்கும் அதிகாரம் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கிடைக்கப் போவதில்லை. 1987ஆம் ஆண்டு இராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் இணைந்து திணித்த ஒப்பந்தம் ஈழத்தமிழினத்திற்கு எந்தத் தீர்வை தராது என்று அப்போது சுதுமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் கூறினார்.



அப்போது அவர் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறோம்: “இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமென நாம் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு.



தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்ட வட்டமாக உங்களுக்கு எடுத்தக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால், எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை” என்று தெளிவாக பிரபாகரன் பேசியுள்ளார்.



அது இன்றளவும் வரலாறாக தமிழர் நெஞ்சங்களில் உள்ளது. உண்மை இவ்வாறிருக்க, ஈழத் தமிழினத்தின் மீது, அவர்களுக்கு எவ்வித அரசியல், பொருளாதார அதிகாரத்தையும் வழங்காத 13வது திருத்தத்தைக் காட்டி ஒரு தீர்வைத் திணிக்க இலங்கை, இந்திய அரசுகள் முயற்சிப்பதை தமிழர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தின் இலக்கு தனித் தமிழ் ஈழமே. எனவே, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அந்த உன்னத இலங்கை அடையும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: