Monday, July 15, 2013

ஜாதி பேரணிக்கு தடை: என். சேதுராமன் வரவேற்பு.

ஜாதி பேர​ணிக்கு தடை விதித்​தி​ருப்​பது தேச வளர்ச்​சிக்கு நல்​லது என அகில இந்​திய மூமுக நிறு​வ​னத்​த​லை​வர் மருத்​து​வர் என். சேது​ரா​மன் தெரி​வித்​துள்​ளார்.​ இது தொடர்​பாக அவர் வெள்​ளிக்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யி​ருப்​பது:​ ஜாதி​யின் பெய​ரில்,​​ அப்​பாவி மக்​களை ஏமாற்றி,​​ அதில் பணம் சம்​பா​திக்​கும் நோக்​கத்​தில் உள்ள தலை​வர்​க​ளுக்கு அலா​கா​பாத் நீதி​மன்​றம் சவுக்​கடி தந்​தி​ருக்​கி​றது.​ எங்​க​ளது இயக்​கம் இந்த உத்​த​ரவை முழு​ம​ன​தோடு வர​வேற்​கி​றது.​ ஜாதி அடிப்​ப​டை​யி​லான பேரணி மட்​டு​மல்ல,​​ ஜாதி அடிப்​ப​டை​யில் லட்​சம் பேர் கூடும் மாநா​டு​க​ளுக்​கும் தடை​வி​திக்க வேண்​டும்.​ இது​போன்ற நட​வ​டிக்​கை​கள்​தான் இந்​தி​யாவை வளர்ச்​சிப் பாதைக்கு கொண்​டுச் செல்​லும் என அவர் தெரி​வித்​துள்​ளார்.

No comments: