Tuesday, July 2, 2013

கோலாலம்பூர்-மதுரைக்கு விரைவில் விமான சேவை

இந்த ஆண்டு ஏப்ரலில், மலேசியாவின் ஏர் ஏசியா, இந்தியாவின் டாடா சன்ஸ் மற்றும் டெலஸ்டரோ டிரேட் பிளேஸ் நிறுவனங்கள், "ஏர் ஏசியா இந்தியா' என்னும் புதிய குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் துவங்குவதாக அறிவித்தன.


""மதுரை - கோலாலம்பூர் பிரிவில் பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு வாய்ப்புகள் உள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள், கோலாலம்பூர்-மதுரை விமான சேவை துவங்க உள்ளது,'' என, ஏர் ஏசியா முதன்மை செயல் அதிகாரி டோனிபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். தற்போது திருச்சியில் இருந்து மலேசியா செல்வோரில், 70 சதவீதம் பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

""மதுரை - கோலாலம்பூர் விமான சேவை

துவங்குவதால், இந்தப் பயணிகளின் போக்குவரத்துச் செலவு, பயண

நேரம் வெகுவாக குறையும். எனவே தென்மாவட்டங்களில் சுற்றுலா, தொழில் துறை வளர வாய்ப்பு ஏற்படும்,'' என தமிழ்நாடு தொழில்

வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

No comments: