Saturday, July 20, 2013

செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பிடிவாரண்ட்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2008ல், ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து,  செந்தமிழன் சீமானுக்கு ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கில், சீமான் ஆஜராகவில்லை. இதனால், நீதிபதி சதாசிவம், செந்தமிழன் சீமானுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

No comments: