Tuesday, July 9, 2013

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள்

சிவகாசியில் இன்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் விருதுநகர் மாவட்டதில் அனைத்து ஒன்றிய, நகர, கிளைகளில் புதிதாக நிர்வாகிகள் அறிவிப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும் ஏழை மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், நோட்டுகள்,மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டனர் இந்நிகழ்சியில் மாநில பொருளாளர் திரு பூபாலன் அவர்கள் தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் வைரமுத்து மற்றும் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்து வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 113 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் மற்று 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.

No comments: