Saturday, February 8, 2014

BLACK FLAG TO JAYALALITHA


இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருடா வருடம் அக்டோபர் மாதம் கடைசி வாரம் முழுமைக்கும் கோவில் திருவிழா போல நடைபெறும் ஓர் ஆன்மீக நிகழ்வை, ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளின் தலையீட்டால் கடமைக்கு பசும்பொன் வந்து தலை காட்டி செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். பெரும்பான்மை சமூகம் சார்ந்த விழா என்பதால், தமிழகத்தில் செயல்படும் லெட்டர்பேடு கட்சி முதற்கொண்டு மாநிலத்தை ஆளும் திராவிட கட்சிகளும், மத்தியில் ஆளும் தேசிய கட்சிகள் உள்பட அனைவரும் அக்டோபர் 30ம் தேதியென்று பசும்பொன்னை ஆக்கிர...மித்து கொள்வது தான் கடந்தகால வரலாறு. அப்படிப்பட்ட ஆன்மீக விழாவான தேவர் ஜெயந்திக்கு தடை போட்ட ஜெயலலிதா, முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து முக்குலத்து ஓட்டு வங்கியை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதன் முதல் முயற்சியாக, ஓட்டுக்காக கொடுக்கப்படும் லஞ்சம் போல, வருகின்ற பிப்ரவரி 09ம் தேதி பசும்பொன்னில் தங்க கவசம் அணிவிக்கிறேன் என்ற பெயரில், இழந்த தேவரின ஓட்டு வங்கியை கவர மலிவான அரசியல் யுக்தியை பயன்படுத்துகிறார். இதில் வெட்க கேடான விசயம் என்னவெனில், 32 1/2 கிராமங்களை சொந்தமாக கொண்டு பெரிய ஜமீன்தாராக வாழ்ந்திருக்க வேண்டிய பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர், தேசியவாதியாகவும் - துறவி போல பிரம்மச்சாரியத்தை கடைபிடித்தும், பொன், பெண், மண் ஆசையற்ற ஆன்மீகவாதியாகவும், இறுதிவரை எளியவராகவே வாழ்ந்த மாமனிதரான ஆன்மீக சித்தருக்கு, தங்க கவசம் சூட்டுவதென்பது கேடுக்கெட்ட திராவிட அரசியலின் சூழ்ச்சி என்பதை ஓட்டளிக்கும் எம் மக்கள் புரிந்து கொள்ளாதவரை, தமிழ்நாட்டை தமிழர் ஆள்வதற்கான 'தமிழ் தேசிய அரசியல்' என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். இதுவரை அதிமுக வை தன் தலையில் வைத்து கொண்டாடியது எங்கள் முக்குலம்மட்டுமே, ... ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தேவரினத்தை தேவையில்லையென்று கருதிய அதிமுகவே, மாமன்னர் பூலித்தேவன் நினைவுநாள் விழா தடை, கீழத்தூவல் ஐவர் நினைவுதினதடை, மாவீரர்கள் மருதிருவர் குருபூஜை தினதடை, தெய்வீகத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கசித்தர் அவர்களின் ஜெயந்திவிழா தடை, என்று எம்மின மக்களுக்கு ஏற்படுத்திய இன்னல்கள் ஏராளம், எதிரிகளைக்கூட மன்னித்து, அவர்கள் செய்த தவறை மறந்துவிடும் எம்மக்கள், துரோகிகளை மன்னிக்கும் பழக்கமில்லை, அதிமுக என்ற துரோக கட்சியை வழிநடத்தும் நாட்டியகாரியே, இனிமேலும் உன்வேஷம், முக்குலத்தோரிடம் எடுபடாது, எளியவாழ்வை லட்சியமாய் கொண்ட, சித்தர்நிலை வாழ்ந்த, முருகபெருமானின் திருத்தொண்டராக அவதரித்து காட்சியளித்த எம்தெய்வத்திற்கு, நீ அணிவிக்கும் தங்ககவசத்தால், நீ செய்த துரோகத்தை மறந்துவிடுவோமென நினைத்தாயா துரோகியே, உன் அழிவுபாதையை, நீ தேர்ந்தெடுத்து இரண்டரை வருடங்கள் உருண்டோடிவிட்டன. உன் அரசியல் அஸ்தமித்துபோனபோது, முதலில் உனக்கு ஆதரவளித்தது எம்முக்குலமே என்பதை மறந்து, எங்கள் முதுகில் குத்திய துரோகியே, உன்னை என்றும் மறக்கமாட்டோம், உன் அரசியல் வாழ்க்கையை சிறக்கவிடமாட்டோம், அரவணைப்பதிலும் சரி, அன்புகாட்டுவதிலும் சரி, அடி கொடுப்பதிலும் சரி, தேவனுக்கு நிகர் தேவன்தான் என்பதை நிரூபிப்போம், எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் உன் கட்சியை தோற்கடிப்போம், இது நாங்கள் தெய்வமாய் வணங்கும் தேவரய்யாவின்மீது ஆணை, சத்தியம் அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் Tucc தமிழ் நாடு

No comments: