Friday, February 7, 2014

PLEASE DONT GET TRAPPED BY THIS - தேவர் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டத்திலிருந்து 15 ஆயிரம் அதிமுகவினர் பங்கேற்கத் திட்டம்

அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ரூ.5 கோடி மதிப்பில் தங்கக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் பி.ஆர். செந்தில்நாதன் தெரிவித்தார். சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியதாவது: வரும் பிப். 9ஆம் தேதி கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் தங்கக் கவசம் வழங்கப்பட உள்ளது. பொதுச் செயலர் ஜெயலலிதா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கக் கவசத்தை வழங்க உள்ளார். இந்த விழாவில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் அதிமுகவினர் பஸ், வேன், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் அணிவகுத்துச் செல்ல மாவட்ட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை திருப்பத்தூரில் காலை 10 மணிக்கும், காரைக்குடியில் காலை 11.30 மணிக்கும், சிவகங்கை, மானாமதுரை தொகுதிக்கான கூட்டம் சிவகங்கையில் மாலை 5 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டங்களில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பங்கேற்க உள்ளார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பங்கேற்க உள்ள விழாவில் அவரை வரவேற்கும் வகையிலான அணிவகுப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக சார்பு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். . NOTE : SHE IS JUST DOING THIS FOR HER POLITICAL IMAGE...PLEASE DONT GET TRAPPED THIS TIME....WE HAVE TO BE CAREFUL....

No comments: