Monday, February 10, 2014

நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியினர் மீது ராமேசுவரம் காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காவல்துறையினரின் தடையை மீறி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கண். இளங்கோ தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பத்மனாபன், மாணவர் அணி செயலாளர் வெங்குளம் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் பாக்கியராஜ், இணைச் செயலாளர் முருகானந்தம் உள்பட அக்கட்சித் தொண்டர்கள் பலர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து, ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதித்திருப்பதாக கூறினர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் மனு அளித்தனர். .

No comments: