Monday, February 24, 2014

நாடாளும் மக்கள் கட்சி இன்றி இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது: நடிகர் கார்த்திக் பேச்சு


நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடந்தது. மாநில அமைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்றார். கட்சி நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் பேசியதாவது:– இன்று நாம் விதைத்த விதை 2 மாதத்தில் விருட்சமாகி ஆலமரமாக மாறும். தமிழகம் தற்போது இந்தியாவில்தான் இருக்கிறதா? என்பதே சந்தேகமாக உள்ளது. தமிழன் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறான். இதுவரை நாம் ஏமாற்றப்பட்டோம். இனி ஏமாற்றியவர்கள்தான் ஏமாறவேண்டும். இனி நாடாளும் மக்கள் கட்சியின் தயவின்றி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நான் சென்னை சென்றதும் ஒரு வாரத்தில் நல்ல சேதி வரும். அதன் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்ல காலம் பிறக்கும். அப்போது விழா கொண்டாடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: