Wednesday, February 12, 2014

இனி மதன் கார்க்கி கவி இளவரசு - புலிவால் படத்திலிருந்து புது டைட்டீல்

கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளில் ஒருவரான மதன்கார்கி, தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு பாடல்களும், சில படங்களுக்கு வசனமும் எழுதி வருகிறார். இந்நிலையில் நடிகர்கள், கவிஞர்களுக்கு பட்டம் கொடுக்கப்படுவதை போன்று இப்போது இவருக்கும் ஒரு பட்டம் கொடுத்துள்ளனர். கவிப்பேரரசுவின் வாரிசு என்பதால் இவருக்கு கவிஇளவரசு என்று பட்டம் கொடுத்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் புலிவால் படத்தில் தான் இந்த டைட்டீல் கொடுக்கப்பட்டுள்ளது. மாரிமுத்து இயக்கத்தில், என்.ஆர்.ரகுநந்தனின் இசையில், நேற்று பார்ட்டி... என்ற ஒரு பாடலை மதன்கார்கி எழுதியுள்ளார். மதன்கார்கிக்கு இந்தபட்டத்தை கொடுத்தற்காக நாங்களும், எங்களது படக்குழுவும் பெருமை அடைகிறோம் என்று கூறியுள்ளார். தற்போது மதன்கார்கி, ஐ, பாகுபாலி உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களையும் சேர்த்து சுமார் 15 படங்களுக்கு பாடல்வரிகளும், 5 படங்களுக்கு வசனமும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: