Thursday, January 17, 2013

பசும்பொன் தேவர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கல்


கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சனிக்கிழமை விலையில்லா மடிக் கணினியை முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.செல்வராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் த.பாலு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 165 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments: