Saturday, January 19, 2013

பாலாவின் புதிய படத்தில் விக்ரம்- விஷால்


தமிழ் சினிமாவில் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள், கதாநாயகிகள் நடிக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில் விக்ரம்- விஷால் இருவரும் தற்போது இணையவிருக்கிறார்கள். பரதேசி படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படமொன்றில்தான் விக்ரம்- விஷால் இருவரும் இணையவுள்ளனர்.

வழக்கமாக இயக்குனர் பாலாவின் அடுத்தடுத்த படங்களுக்கிடையில் நீண்ட கால இடைவெளி இருக்கும். ஆனால், பரதேசி படம் வெளியான பின்பு, விரைவிலேயே விஷால்- விக்ரம் இணையும் படத்தை துவங்க திட்டமிட்டிருக்கிறாராம் பாலா. இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் ஏற்கெனவே பாலா இயக்கிய ‘சேது', ‘பிதாமகன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோல் விஷாலும் பாலா இயக்கிய ‘அவன்-இவன்' படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: